
கொழும்பு,ஜுலை 9
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் நான்கு ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் விசேட அதிரடி படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் ஏனைய ஊடகவியலாளர்களும் இருந்த போதும் மேற்படி ஊடகவியலாளர்களைத் தேடிவந்து தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.
இதில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.