பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம் பெற்று வருகிறது.
கடந்த ஏழாம் திகதி திருக்கதவு திறத்தலுடன் உற்சவம் இனிதே ஆரம்பமாகியது.
ஐந்தாம் நாளாகிய இன்று பிற்பகல் பக்திப் பரவசமூட்டும் துலாக்காவடி நிகழ்வு இடம்பெறும். ஆறாம் நாளாகிய நாளை நள்ளிரவு தவநிலை நிகழ்வு இடம்பெற்று 7 ஆம் நாளாகிய 13.07.2022 புதன்கிழமை சர்க்கரை அமுது நிகழ்வுகளுடன் இரவு திருகுளித்தி, விசேட பூசை வழிபாடுகளுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

