13ம் திகதி பதவி விலகுவேன்: பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார் கோட்டா!

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

முன்னதாக அறிவித்தபடி பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சனிக்கிழமை (9) அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதம் 13ஆம் திகதி பதவி விலகுவதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *