அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 77 பேர் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – களுவன்கேணி பகுதியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 17 பேர் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *