ரயில்கள் வழமைபோன்று இயங்கும்: கட்டணம் இன்று அதிகரிக்கப்படமாட்டாது – ரயில்வே திணைக்களம்

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் ரயில்கள் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை முதல் நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அலுவலக ரயில்களும் வழமை போன்று இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஓட வேண்டிய அனைத்து ரயில்களையும் இயக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அதன்படி, இன்று இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் வார நாளாக இயக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த ரயில் கட்டண திருத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *