நேற்று முன்தினம் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த ஆர்பாட்டக்காரர்களில் இருவர் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரச்சாரப் பாடலைப் பாடி அங்கிருந்த பியானோவை வாசித்த வீடியோ வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தும் நிலையில் அந்நாட்டில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த மக்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் பலரும் குளித்து, சமையலறைக்குள் புகுந்து சமைத்து சாப்பிட்டு, படுக்கையறைக்குள் தூங்கி எழுந்து, மெத்தையில் குத்துச்சண்டை விளையாடியுள்ளனர்.
அது தொடர்பான பல வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகிவருகின்றன.
இதனிடையே, ஜனாதிபதி அலுவலகத்தில் இருக்கும் பியானோ ஒன்றில் ஒருவர் இசைக்க மற்றோரு ஆர்ப்பாட்டக்காரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரச்சாரப் பாடலான “Wada Karana Ape Viruwa” (வேலை செய்யும் எங்கள் வீரா) என்ற பாடலைப் பாடியுள்ளார்.


பிறசெய்திகள்