மகிழூர் குளக்கட்டு அன்னை ஸ்ரீமுத்துமாரியம்மன் தீ மிதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர் அருள்மிகு குளக்கட்டு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு பெருவிழாவின் தீ மிதிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஆலயத்தின் இவ்வருடத்திற்கான சடங்கு கடந்த 6 ஆம் திகதி, ஆரம்பமாமாகியது. தொடர்;சியாக 8 நாட்கள் சடங்கு நடைபெற்று எதிர்வரும் 13 ஆம் திகதி திருக்குளிர்த்தியுடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.

இதனிடையே ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலய முன்றலில் அமைந்துள்ள தீ குளியில் திடலில் தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

ஆலய சடங்கு கால பிரதம குரு சிவஸ்ரீ விஜியகுமார குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *