உடற்பயிற்சி முறை வாழ்க்கைக்கு மாறிவிட்ட மக்கள்!

உடற்பயிற்சிக்காக வீதிகளில் காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் நடை பயின்ற மக்கள் தொகையை இப்போது காண்பது குறைவாக உள்ளது.

காரணம் எரிபொருள் தடை காரணமாக அனேகர் சைக்கிள்களிலும் குறும் தூரங்களை நடந்தும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

இதனால் நாளாந்தம் உடற்பயிற்சி கிடைக்க ஆரம்பித்து விட்டது.
அதனால் வழமையான உடற்பயிற்சிக்காக நடப்பதைக் குறைத்துக் கொண்டவர்கள் பலர்.

எரிபொருள் தாராளமாகக் கிடைத்த காலங்களில் மோட்டார் சைக்கிள்களில் பரபரப்பாக ஓடித் திரிந்த வாழ்க்கையில் ஒரு வித பதட்டம் இருந்தது. ஆனால் தற்போது அவ்வித பதட்டமின்றித் தாம் இயல்பாக நடமாட முடிவதாகவும் தெரிவிப்போர் உள்ளனர்.

தம்மை அங்கே வரவில்லை, இங்கே வரவில்லையெனக் குறை சொல்வார் தற்போது இல்லை. அதனால் உளத் திருப்தியுடன் வாழ முடிவதாகவும் இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இப்படியுமொரு நன்மை உள்ளதெனச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *