மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊழியர்களுக்கு பணிக்கு சமுகமளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தை மூடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், எதிர்வரும் 15 ஆம் திகதி அத்திணைக்களம் திறக்கப்படும் என சுற்றறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, வாரத்தின் 5 வேலை நாட்களுக்குள், வெள்ளிக்கிழமை அல்லாத பொது விடுமுறைகள் தவிர, வெள்ளிக்கிழமைகளில் திணைக்களம் மூடப்படும்.

அதற்கமைய, வாகனப் பதிவு 070 76 77 877, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் 070 76 77 977 என்ற எண்களுக்கு, வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அழைப்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களை பெறலாமென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *