
குருநாகல்,ஜுலை 12
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உள்நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும் வைத்தியசாலை ஊழியர்களின் நடவடிக்கைகள் காரணமாக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பில் அந்த வைத்தியசாலையின் விசேட வைத்தியர் மருத்துவர் தயானந்த பண்டார கருத்து வெளியிடுகையில்,
எங்கள் மருத்துவமனையின் சேவை தற்போது குறைவாக உள்ளது. இன்று உள்நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. எரிபொருள் பிரச்சினை மிகவும் தீவிரமானது. இந்த மருத்துவமனையில் பணி புரியும் 90% நிபுணர்கள் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. கண்டி மாகாணத்தில் பலர் உள்ளனர் அல்லது கொழும்பு. பிறகு பஸ் அல்லது ரயிலில் வர வேண்டும். வந்து ஒன்றரை வாரங்களுக்கு வீட்டிற்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. சுகாதார அமைச்சுடன் நாங்கள் கலந்துரையாடியதன் படி, நாட்டின் நிலைமையைப் பொறுத்து வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வரை எங்களால் எரிபொருளைப் பெற முடியாது என்றார்.