நாட்டின் அரசியல் குழப்பங்களால் தாமதமடையும் அதானியின் மின்சார திட்டங்கள்

500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான இந்தியாவின் அதானி குழுமத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களின் நடைமுறை, மேலும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அதிகாரிகள் மத்தியில் உள்ள முரண்பாடுகளால் இந்த திட்டங்கள் தாமதமாகியுள்ளதாக மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் ஆர்வமாக உள்ளார்.

எனினும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன கடந்த வாரம் தனது திடீர் இராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளதால், இந்த திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதானி சூரிய ஒளித் திட்டத்திற்கு தற்காலிக அனுமதி வழங்குவதை ஆட்சேபித்தே பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்ட ஆவணத்தில் மின்சக்தி அமைச்சு,கடந்த வாரம் கையெழுத்திட முயற்சித்தது. எனினும் பணிப்பாளர் நாயகத்தின் முடிவால், உடன்படிக்கை கைச்சாத்திடல் தாமதாமாகியுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *