
முன்னர் அறிவித்தபடி நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறில்லை எனில் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இது தொடர்பில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்கு கிடையாது எனவும் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பிறசெய்திகள்