
கொழும்பு,ஜுலை 12
லங்கா ஐஓசி நிறுவனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று (11) 209 அம்புலன்ஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டதாக அதன் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவசரகால சேவைகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கு எரிபொருளை வைத்திருக்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.