போர்க்களமாக மாறிய கொழும்பு; விமானப் படைகளும் களமிறக்கம்!

கொழும்பில் தற்போது பதற்றமான நிலை உருவாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று மிகவும் தீவிரத் தன்மை அடைந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் பிரதமர் அலுவலகத்தை சுற்றி சற்றுமுன் விமானப்படை ஹெலிகாப்டர் சுற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு மேலே விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டு வருகிறது. விமானத்தின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *