ஜனநாயக முறையில் தீர்வு காண அனைவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: மருத்துவ நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்து!

அரசியல் சட்டத்தை மதித்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் ஜனநாயக முறையிலான தீர்வுகளை காண அனைத்து தரப்பினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ நிர்வாகிகள் சங்கம் (ஏ.எம்.ஏ) தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிடும் போதே, நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமை குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை இதற்கு முன்னர் சந்தித்திராத மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது என AMA தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக ஒடுக்குவதை அவர்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு, நிராயுதபாணியான போராட்டக்காரர்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு முப்படை மற்றும் காவல்துறையினரை அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

எனவே, சந்தர்ப்பவாதக் கட்சிகளால் தூண்டிவிடப்படாமல், வன்முறையின்றி அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு குடிமக்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்ய பொறுப்புள்ள தரப்பினரையும் AMA கேட்டுக்கொள்கிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *