தொடர் குடியிருப்பில் பாரிய தீ விபத்து; 3 வீடுகள் தீக்கிரை!

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டேல்பெத்த கிராம சேவகர் பிரிவின் சுவிண்டன் பெருந்தோட்டப் பகுதியில் பாடசாலைக்கு அருகிலுள்ள 6 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 8.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் தொடர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அயலில் உள்ள இரண்டு வீடுகளுக்கும் தீ பரவியதால் 3 வீடுகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு, வீட்டு தளபாடங்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளன.

சுவிண்டன் தோட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பாரிய முயற்சியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *