அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து!

அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அன்டானியோ குட்டாரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் சமாதானமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போராட்டக்காரர்களின் மெய்யான கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கான மூல காரணங்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டாரஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *