ஜனாதிபதியாக சஜித்தும் பிரதமராக அனுர குமாரவும் நியமிக்கப்பட வேண்டும்

<!–

ஜனாதிபதியாக சஜித்தும் பிரதமராக அனுர குமாரவும் நியமிக்கப்பட வேண்டும் – Athavan News

சர்வ கட்சி அரசாங்கத்தில் புதிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவும், பிரதமராக அனுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார் .

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின்  கூட்டம் கல்முனையில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று   (புதன்கிழமை)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாம் அடையாளம் கண்ட வகையில் சஜித் பிறேமதாஸ, அனுரகுமார திஸநாயக்க ஆகிய இருவரும் இந்நாட்டை தலைமை ஏற்று நடத்துவதற்கு மிக மிக பொருத்தமானவர்கள் என்பதோடு   சஜித் ஜனாதிபதியாகவும், அனுர பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று நாம் முன்மொழிகின்றோம்.  இதேவேளை   ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலகி வழி விட வேண்டும் என்றும் தெரிவித்தார் .

அத்துடன்     வடகிழக்கு மக்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்ற குறுகிய சுய இலாப தலைமைகளை விரட்டி அடிக்க வேண்டும் என்பதோடு   விக்னேஸ்வரனும் ஒன்றுதான், சம்பந்தரும் ஒன்றுதான். எமது மக்கள் புதிய தலைமையின் கீழ் பயணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *