கோட்டா ஒரு இன அழிப்பு படுகொலையாளி என பிரகடனப்படுத்துங்கள்-வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை!

வடக்கு ,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர்கள் சர்வதேச சமூகத்துக்கு பல கோரிக்கைகளினை முன்வைத்திருந்தார்கள்.

இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியல் சந்திப்பின் போதே இந்த கோரிக்கைகளினை தெரிவித்திருந்தனர்.

அந்த கோரிக்கைகளாவன ;

மக்கள் போராட்டத்திற்குப் பயந்து இனஅழிப்பு மற்றும் போர்க்குற்றவாளியான ஜனாதிபதி இலங்கை கோத்தபாயராஜபக்ச மாலைதீவுக்குத் இலங்கையர்களும் தப்பியோடியுள்ளார் .

மாலைதீவு எதிர்ப்புத் தெரிவித்துவருதனால் தற்போது வேறு நாட்டிற்குச் கடும் செல்வதற்கு முயற்சித்துவருகின்றார் . சிங்கப்பூர் செல்லவிருப்பதாகவும் ஒரு தகவல் வந்திருக்கின்றது . அங்கும் எதிர்ப்புக்கள் வரக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் அவர் முயற்சிக்கலாம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் 1971 நாட்களுக்கு மேலாக எங்கள் உறவுகளைத் தேடி போராடி வருகின்றோம் . எங்களுடன் இணைந்து போராட்டம் நடாத்திய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோரில் இதுவரை 138 மரணமடைந்திருக்கின்றனர் .

எங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தங்கள் கைகளின் மூலமே படையினரிடம் ஒப்படைத்திருந்தனர்.அவர்களின் கதி என்ன என்பது தொடர்பாக இதுவரை எங்களுக்கு பதிலளிக்கப்படவில்லை.

எங்களுடைய உறவுகள் தொடர்பாக சர்வதேச சமூகம் சிபார்சு செய்த நிலைமாறுகால நீதி ஏற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை . நிலைமாறுகால நீதி ஏற்பாடுகள் உண்மையைக் கண்டறிதல் , நீதிவழங்குதல் , இழப்பீடு வழங்குதல் , மீளநிகழாமையை உறுதிப்படுத்துதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்து . கண்துடைப்புக்கு காணாமல் போனோர் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் என்பன உருவாக்கப்பட்டன .

இந்த அலுவலகங்களின் செயற்பாடுகளில் நம்பிக்கை அற்றிருந்ததினால் நாம் அவற்றை முழுமையாக நிராகரித்து சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தோம் . இந்தக்கோரிக்கையை முன்வைத்து பல நாட்களாக போராடிவருகின்றோம் .

தற்போது இந்தக் கொலையாளிகள் சிங்கள எதிர்ப்பு காரணமாக நாட்டைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

எனவே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாம் சர்வதேச நாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நோக்கி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம் .

1.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஒரு இன அழிப்பு படுகொலையாளி , போர்க்குற்றவாளி என்பதை பிரகடனப்படுத்துங்கள் .

2.ஜனாதிபதி கோட்டபாயாவிற்கு எந்த ஒரு நாடும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது . தங்கள் நாட்டிற்கு அவர் வருகைதரின் அவரைக் கைதுசெய்து குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் .

3.ஜனாதிபதி கோட்டபாயவிற்கும் ஏனைய ராஜபக்சாக்களுக்கும் சர்வதேச ரீதியாக இருக்கும் சர்வதேச சொத்துக்களை முடக்கி அவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்ள வழி செய்யுங்கள் .

4.ஜனாதிபதி கோட்டபாயவும் , அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சவும் போரின்போதும் , போரின் பின்னரும் வன்னியில் உள்ள தமிழ் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்துள்ளனர் . வங்கிகளில் இருந்த பணத்தையும் , கொள்ளையடித்துள்ளனர் . அந்தச் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து மக்கள் அதனைப் பெற்றுக்கொள்ள வழி செய்யுங்கள்.

5.ஐரோப்பிய நாடுகளின் நீதிமன்றங்கள் பலவற்றிற்கு மனித குலத்திற்கு எதிராக குற்றம் செய்தவர்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் அவர்களைக் கைதுசெய்து விசாரணை செய்யும் அதிகாரம் உண்டு . எனவே ஐரோப்பிய நாடுகளுக்கு ஜனாதிபதி கோட்டபாயவும் , ஏனைய ராஜபக்சாக்களும் வருகை தந்தால் அவர்களை கைது செய்து தங்கள் தங்கள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்துங்கள்.

6.போரின் பின்னர் தமிழர் ஆக்கிரமிப்புக்கள் சிறீலங்கா தாயகத்தில் பச்சை ஆட்சியாளர்களினால் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்.

  1. அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதற்கு அழுத்தம் கொடுங்கள் .
  2. படையினரால் பறிக்கப்பட்ட காணிகளை மக்கள் மீளப் பெறுவதற்கு வழிசெய்யுங்கள்
  1. தேசம் , இறைமை , சுயநிர்ணயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உருவாவதற்கு வழி செய்யுங்கள் .
  2. அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் மக்களுக்கு ஒரு இடைக்கால நிர்வாகம் உருவாகுவதற்கு வழி செய்யுங்கள் .

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *