நாடாளுமன்றம் நாளை கூட்டப்படாது: மஹிந்த யாப்பா

கொழும்பு, ஜூலை 14

நாடாளுமன்றம் நாளை(15)  கூட்டப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்ததன் பின்னர் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பிரதமர் பதவிக்கான பெயரை சபாநாயகரிடம் நாளை பரிந்துரை செய்யவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் நாளை காலை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது குறித்த பெயர் முன்மொழியப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆளும் மற்றும் எதிரணிகள் இணைந்து பிரதமர் ஒருவரை முன்மொழியுமாறு பதில் ஜனாதிபதி நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அரசியல் கட்சிகள், கொழும்பில் இன்று பேச்சு நடத்தின.

அந்தவகையில் பிரதமருக்கான பெயரை நாளை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *