கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் கஞ்சா பொட்டலத்துடன் இளைஞன் கைது!

சிறிய கஞ்சா பொட்டலத்துடன் ஜனாதிபதி மாளிகையில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் கம்பஹா மீரிகமை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் ஜனாதிபதியின் நீச்சல் தடாகத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்துகொண்ட இளைஞரை விசாரித்தபோது கஞ்சா பொதி வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *