சிங்கப்பூரில் தரையிறங்கிய கோட்டாபய

கொழும்பு,ஜுலை 14

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயணம் செய்தார் எனக் கூறப்படும் சவூதி அரேபிய விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.

சவூதி அரேபியாவின் சௌதியா பிளைட் SV788  விமானம் இன்று சவூதி அரேபியாவின் றியாத் நகரிலிருந்து புறப்பட்டு, மாலைதீவு வந்தடைபின் மாலைதீவிலிருந்து சிங்கப்பூரை நோக்கி சிங்கப்பூர் நேரப்படி காலை 11.27 மணிக்குப் புறப்பட்டது.

இவ்விமானத்தில் கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் மiனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோரும் பயணித்தனர் என செய்திகள் வெளியாகியிருந்தன

அவ்விமானம்  சிங்கப்பூர் நேரப்படி இரவு 7.23 மணிக்கு (இலங்கை நேரப்படி மாலை 4.57 மணிக்கு சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

சிங்கப்பூரை சென்றடைந்த பின்னர் தனது ராஜினாமாவை அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *