
பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி பதவியை ஏற்கத் தான் தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இன்று வியாழக்கிழமை பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழுவினரும் அவருக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுமாறு தம்மிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே தாம் தெரிவு செய்யப்பட்டால் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
பிறசெய்திகள்