குமார வெல்கமவை தாக்கிய மேலும் ஒருவர் கைது!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்களுக்கு மத்தியில் மகும்புர பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கிரிவத்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் அவரது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்கள் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததுடன் எம்.பி பயணித்த கெப் வண்டிக்கு தீ வைக்கப்பட்டு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *