ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 13 ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக கூறிய போதும் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலும் கிடைக்காததால் கோட்டாவின் பதவி விலகலை எதிர்பார்த்திருந்த மக்கள் தற்போது தமது எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நெட்டிசைன்கள் படங்கள் காணொளிகள் மூலம் கடிதத்தை எழுதிறார் கிழிக்கிறார் என கோட்டாவை கலாய்த்து வருகின்றனர்.
மேற்படி மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக கோட்டபாய ராஜபக்ச இன்று மாலை மின்னஞ்சல் மூலம் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் கோட்டபாய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பான கடிதமொன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ‘ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக” சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

பிறசெய்திகள்