ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலகினார் என்பதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகருக்கு நேற்று வியாழக்கிழமை (14) அனுப்பி வைத்துள்ளார்.
சட்ட ஆலோசனைகளுக்காக சபாநாயகர் குறித்த கடிதத்தை சட்டமாதிபருபக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதை தொடர்ந்து நாட்டிலிருந்து மாலைதீவிற்கு வெளியேறிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அங்கிருந்து நேற்று வியாழக்கிழமை (14) மாலை சிங்கப்பூர் சென்றடைந்ததை தொடர்ந்து தனது பதவி விலகலை சபாநாயகர் ஊடாக அறிவித்துள்ளார்
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திற்கு பின்னர் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்த முதலாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ கருதப்படுகிறார்.
பிறசெய்திகள்