அரியாசனம் ஏறும் ரணில்;மஹிந்த விடுத்த எச்சரிக்கை!

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபாய ராஜபக்ச விலகியதை தொடர்ந்து அரசியலில் பல்வேறு திருப்பங்கள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையில் இன்றையதினம் ரணில் விக்கிரமசிங்க தற்போது பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ஷவின் இராஜினாமாவை சபாநாயகர் உறுதி செய்துள்ள நிலையில் இன்று மாலை ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம்செய்வார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்களை அமைச்சர்கள் சபைக்கும் பாராளுமன்றத்திற்கும் மாற்றி பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்துவதற்கு விருப்பமில்லாத எந்த ஒரு அரசியல்வாதியையும் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *