சுற்றுலா உட்பட பல துறைகளுக்கு டீசலை வழங்க ஐஓசி தீர்மானம்!

இலங்கையில் சுற்றுலாத்துறை தொடர்பான சேவைகளில் ஈடுபட டீசலை வழங்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இலங்கை சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட்ட பயண சேவை வழங்குனர்களுக்கு எரிபொருள் வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கு மேலதிகமாக பல துறைகளுக்கும் டீசல் வழங்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள், பயணச் சேவை வழங்குநர்கள், அனுமதி பெற்ற தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களை டீசல் விநியோகத்திற்கான ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் பதிவு செய்ய லங்கா ஐஓசி இணைந்து திட்டமிட்டுள்ளது.

மேலும், லங்கா ஐஓசி சில நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *