
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதியின்மை ஏற்படாத வகையில் காவல்தறையினர் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை அவமதித்தமை, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், காவல்துறையினர் தொடர்ச்சியாக இவ்வழக்கிலே நீதிமன்றிற்கு அறிக்கைகளை சமர்ப்பிக்காமை, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டமை தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கச் சட்டத்தரணிகள் இணைந்து நீதிமன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.