குளவிகளின் தாக்கம் அதிகரிப்பு: மக்களே அவதானம்! சுகாதாரத்துறை எச்சரிக்கை

சாவகச்சேரிப் பிரதேசத்தில் குளவிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்களை அவதானமாகச் செயற்படுமாறு சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மரங்களிலிருந்து கலையும் குளவிகள் வீதியில் செல்வோரைக் கொட்டுகின்றன. மீசாலை மேற்கு மற்றும் மந்துவில் மேற்குப் பகுதிகளில் வீதியில் பயணித்த நால்வர் அண்மையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மீசாலை மேற்கில் 28 வயதான பெண்ணும் 8 வயது சிறுமியும் மந்துவில் மேற்கில் 39 வயதான தாயும் நான் கரை வயதான பெண் குழந் தையுமே இவ்வாறு குளவிக் ளால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது கடும் காற்று வீசுவதால் மரங்களில் கூடுகட்டியுள்ள கருங்குளவிகள் காற்றின் வேகத்தில் கலைகின்றன.

இதனால் வீதியில் பயணிப்போரை வேகமாகத் தாக்குகின்றன. எனவே வீதிகளில் பயணிப்போர் மிக அவதானத் துடன் செயற்படுமாறு சுகாதாரத் திணைக்களத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *