
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரும் நிபந்தனைகளுடன் இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் சேர்ந்த 11 மீனவர்களும் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றின் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த ஊர்காவற்துறை நீதிபதி கஜந்திபாலன் மேற்படி 11 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன்பிடி படகுகளும் அரச உடமையாக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட மீனவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை இந்திய தூதரகம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிறசெய்திகள்