மாவட்ட ரீதியான சதுரங்க போட்டியில் ஐந்து மாணவர்கள் சம்பியன்!

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் நடாத்திய மன்னார் மாவட்டத்திற்கான சதுரங்க போட்டியில் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையிலான மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த ஐந்து மாணவர்கள் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

2022 ஆண்டுக்கான மாவட்ட ரீதியான சதுரங்க போட்டி மன்/புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இப்போட்டியில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த கொட்வின் (under-9) பிரிவிலும் அபிஷெக் (under-15) பிரிவிலும் டனியெஸ் (under-17) பிரிவிலும் சார்லஸ் (under-17) பிரிவிலும் நிமெஸ் (under-20) பிரிவிலும் Champions ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

அதேநேரம் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த 17 மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *