
ஜூலை 21 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதிகாரிகளின் தலைமையில் சூம் செயலி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி புதன்கிழமை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.