
ஜனாதிபதியாவதற்கு போட்டி வலுக்கிறது – 20 ஆம் திகதி முடிவு எவ்வாறு அமையும்?
எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறைவேற்று ஜனாதிபதியின் பதவி வெற்றிடத்திற்காக போட்டிகள் அதிகரிக்கின்றது.
தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தானும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார, என பட்டியல் நீள்கிறது.
நாளை கூட உள்ள நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்காக 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்துவது என முடிவு உறுதியானால் இரகசிய வாக்கெடுப்பில் கூடுதலான வாக்கை பெறுபவர் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். போட்டி இல்லை என்றால் தற்போது பதில் ஜனாதிபதியாக உள்ள ரணில் தேர்வு செய்யப்படுவார்