
கொழும்பு, ஜுலை 16
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது கடுமையான மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அவசர நிதியம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அவசர நிதியம் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே கடுமையான மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அவசர நிதியம் தெரிவித்துள்ளது.