வவுனியாவில் பள்ளிவாசல் காரியாலய கட்டடம் திறப்பு!

வவுனியா, வெண்கல செட்டிக்குள பிரதேசத்திற்குட்பட்ட வாழவைத்த குளத்தில் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாசலில் நிர்மானிக்கப்பட்ட காரியாலய கட்டடம் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், செட்டிக்குள பிரதேச சபை தவிசாளர் ஜெகதீஸ், அல்ஹிமா தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் நூருல்லாஹ், அத்-தைபா மனிதாபிமான நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ரிஸ்வான், பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உலமாக்கள், பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த கட்டடம் கே.கே.மஸ்தானின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *