கோட்டபாய ராஜபக்ச கடந்த 14ம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார்.
இவ்வாறான நிலையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
இவ்வாறான நிவையில் இன்று நடைபெற்றுவரும் விசேட பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கோட்டபாய ராஜபக்சவின் இராஜினாமா தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

