வாகன ஓட்டிகளுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் (அனுமதிச் சீட்டு) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உத்தரவாதமான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு ஒதுக்கப்படும். 1 NICக்கு 1 வாகனம், வாகன சேஸ் எண் & விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும்.
QR உடன் எரிபொருளை நிரப்புவதற்கான இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்கள் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்தார்.
இன்று மதியம் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.