
நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து நுழைவாயில்களுக்கும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் இரகசிய வாக்கெடுப்பாக நடைபெறவுள்ளது.
இதேநேரம், நாட்டில் இன்று முதல் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.