பாராளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு

கொழும்பு, ஜுலை 18

பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து நுழைவாயில்களும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (20) பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பாக நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *