காலிமுகத்திடல் முற்றுமுழுதாக முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள்! 8 பேர் கைது

கடந்த 100 நாட்களுக்கு மேலாக கொழும்பு காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்தின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட முப்படையினர் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்தனர்.

இவ்வாறு அங்கிருந்த போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி முற்றுமுழுதாக முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ளதகவும் இதன்போது 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *