தீக்கிரையாக்கப்பட்ட ஜனாதிபதியின் வீடு; பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டு உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் விபரங்கள் தெரிந்தவர்கள் 071-8594950 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு, அது தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளி காட்சிகளை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களால் பாரியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது பிரதமராக பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்ளுப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடு போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *