போராட்ட உரிமை மறுக்கப்படக் கூடாது -சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை !

போராட்ட உரிமை, ஜனநாயக உரிமை, மறுக்கப்பட கூடாது ,ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் தாக்கப்படுவது விரோதமானசெயல் ஆகும். என ,வட மாகாண சபை அவை தலைவர் சி .வி. கே .சிவஞானம் தெரிவித்துள்ளார் .

இன்றய தினம் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அநுராகலையில் இருந்து கோட்டா கோ கம என்ற அந்த போராட்டக்காரர்கள், வன்முறை மூலம் அகற்றப்படுவதும் தாக்கப்படுவதுமான செய்திகள் , அதோடு அந்த செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் போன்றவர்கள் தாக்கப்படுவதும் அகற்றப்படுவதும் ஒரு ஜனநாயக விரோதமான ஸ்த்திரங்கள்.

மிக அமைதியாக போராட்டத்தை நடத்திக்கொண்டு இருப்பவர்கள் அதிலும் குறிப்பாக நேற்றைய தினம் பிரதமர் அலுவலகதில் இருந்து அவர்கள் தாமாகவே விலகி கொண்ட சூழ்நிலையில் இவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டியது, ராணுவத்தின் பலத்தை பிரயோகிப்பது தேவையற்றதோடு ,மிகவும் கண்டிக்கத்தக்கது .

இவ்வாறு போராட்ட உரிமை, ஜனநாயக உரிமை, மறுக்கப்பட கூடாது. ஆனால் மறுக்கப்பட்டு இருக்கிறது என்பதும் ,கூடுதலாக மேலும் இந்த போராட்டங்களை அதிகரிக்கச் செய்யும் செயற்பாடாக அதை அமைதிப்படுத்துவதிலும் பார்க்க இன்னும் ஆக்ரோஷப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே இதை நாங்கள் பார்க்கக்கூடியவாறே இருக்கும்.

ஆகவே இது ஒரு நாட்டிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அல்லது மக்களுக்கோ ஜனநாயகத்திற்கோ ஏற்புடையதான ஒரு செயற்பாடே அல்ல. இது தவிர்த்திருக்கப்பட வேண்டும் என்று வட மாகாண சபை அவை தலைவர் சி .வி. கே .சிவஞானம் தெரிவித்துள்ளார் .

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *