ரணில் ராஜபக்சகாவினை விரட்டி அடிப்பதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் – சந்திரசேகரம் போராட்ட அழைப்பு !

நாட்டின் பாதுகாப்பு தரப்பினரால் நேற்றைய தினம் இடம்பெற்ற காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட் தாக்குதலுக்கு நியாயத்தினை பெற்றுக்கொள்வதற்காகவும் அவர்கள் மீதான தாக்குதல்களையும் கண்டித்தும் நாளைய தினம் யாழில் போராட்டம் இடம்பெற உள்ளது .இப்போராடடத்தில் அனைவரும் கட்சி ,மத ,ஜாதி பேதமின்றி ,பிரதேசவாதங்கள் இல்லாது கலந்து கொள்ள வேண்டும் எனறு ஜே.வி.பி இன் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியல் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ;

ஜனாதிபதி செயலகத்திலிருந்து இன்றைய தினம் போராட்டக்காரர்கள் வெளியேறுவதாக கூறப்பட்ட போதிலும் நேற்றைய தினம் நள்ளிரவு நேரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் அப்பாவி இளைஞகள்,யுவதிகள்,சிறுவர்கள் ,குழந்தைகள் மிகவும் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து விரட்டி அடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இவ்வாறு போராட்டக்காரர்கள் மீது ஏவி விடப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் ரணில் ராஜ்பகஷாவுடைய கைக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பது தற்போது உண்மை தெரிய வந்திருக்கிறது.

ரணில் ராஜபக்ஷ அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு எந்தவிதமான அருகதை அற்ற மனிதர் என்பது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

நேற்றைய தினம் இரவு போராடடக்கர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் என்பது கறுப்பு ஜூலையினை மீண்டும் கொண்டுவருதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடாகும்.

எனவே அடக்கு முறைகளை கட்டவிழ்த்து அந்த அடக்குமுறையின் மூலமாக தன்னை தக்க வைக்க முடியும் என்பதை முடியும் ரணில் விக்கிரமசிங்க கனவிலும் நினைத்துப் பார்க்க வேண்டாம்.

அன்றைய இளைஞர்கள் அல்ல இன்றைய இளைஞர்கள் ,உங்களின் அனைத்துவிதமான சித்து விளையாட்டுக்களும் இன்று வெளிப்பட்டுக் கொண்டு நிற்கின்றது. தமிழ் ,சிங்கள ,முல்ஸ்லிம் மக்கள் என ஒன்றாக குரல் எழுப்பட்ட போராட்டமாக காலி முகத்திடல் போராட்டம் அமைந்திருந்தது. இந்த போராட்டம் மீது நீங்கள் கை வைத்துள்ளீர்கள் .

நேற்றைய இரவு முடிக்கப்பட்டதாக இருந்த இந்த போராடடத்தினை மேலும் நிர்மாணிப்பதற்கு அதே பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ,தொழிலற்சங்கங்கள் ,பாதிக்கக்ப்பட்ட அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதையும் மறந்து விட வேண்டாம்.

இனியும் இந்த நாட்டில் அடக்குமுறையினால் இளைஞர்களை ஒடுக்குவதற்கு எண்ணுவீர்களாக இருந்தால் அது வெறும் பகற்கனவு.மக்களோ ,நாடோ ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி இல்லை என்பதை மறந்து விட வேண்டாம்.

இவ்வாறான ஒடுக்குமுறைகள் தொடருமாக இருந்தால் இந்த ரணில் ராஜபக்சகாவினை விரட்டி அடிப்பதற்கு நாடிடின் அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் . யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மக்கள் ,அரசியல் வாதிகள் எந்தவிதமான கடசி ,மத ,ஜாதி பேதமின்றி ,பிரதேசவாதங்கள் இல்லாது அனைவரும் ஒன்று சேர்ந்து காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு நியாயத்தினை பெற்றுக்கொள்வதற்காகவும் அவர்கள் மீதான தாக்குதல்களையும் கண்டித்து நாளை பி.ப 1.00 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற இருக்கின்ற போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *