தலவாக்கலை – மேல்கொத்மலை நீர்த் தேக்கத்தில் குதித்து மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்,
லிந்துலை-மிளகுசேனை தோட்டத்தில் வசித்து வந்த 19 வயதுடைய முத்துரத்தினம் ஜிலோஜினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லிந்துலை-சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்று வரும் குறித்த மாணவி, இன்று தலவாக்கலை பகுதியில் உள்ள தனியார் வகுப்புக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.
அவரது உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்