திருகோணமலை சிவன்கோயில் அருகில் மக்கள் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டமானது இன்று(22) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையில், இன்று தமக்கும் எரிவாயு வழங்கப்படுமென எதிர்பார்த்து மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
இன்றும் எரிவாயு வழங்கப்படாத நிலையில், தமக்கான எரிவாயுவை வழங்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிறசெய்திகள்