யாழில் வந்து குவியும் புதுச் சைக்கிள்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக பலர் துவிச்சக்கர வண்டிகளுக்கு மாறி வருகின்றனர்.

இதன் காரணமாக உதிரி பாகங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளன.

தற்போது எரிபொருள் பிரச்சினைக்கள் சற்று குறைவடைந்த நிலையில், யாழில் புதுச் சைக்கிள்கள் விற்பனைக்கு வந்து குவிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ரூபா. 65000 பெறுமதியான டுமாலா வகை சைக்கிள்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளதாக அறியமுடிகிறது.

மேலும், விற்பனை செய்ய முடியாமல் பல மாதங்களாக ஷோரூம்களில் இருந்த சைக்கிள்கள் இன்று அதிக கிராக்கியுடன் விற்கப்படுகின்றன.

அந்தத் தேவையால், 10,000-15,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சைக்கிள், இன்று 80,000-95,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *