இராணுவத்தினர் நேற்று போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனர்! தேரர் குற்றச்சாட்டு

இலங்கையில் இராணுவம் என கூறப்படுகின்ற பாதாள குழுவைதான் நாங்கள் பார்தோம் என போராட்டக்களத்தில் இருந்த தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் மனித உரிமைகள் குறித்து பேசிகொண்டு இருக்கும் சந்தர்ப்பத்தில்
விமானப்படையின் இராணுவத்தினர் ஒருவர் கெட்ட வார்த்தைகளை பிரயோகித்தார்.

அப்போது நான் இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறும் பொழுது அதைவிட அதிகமாக வார்த்தைகளை பிரயோகித்தார்.

அப்போது அக் கெட்ட வார்த்தைகளை பேசிகொண்டு எங்களுடன் இருந்த வழக்கறிஞரின் தலையை பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டு சென்றார்.

தீடீரென 15 பேர் போல இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டர்.

நான் கூறுகிறேன் நேற்று இராணுவத்தினர் போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருந்தனர்.

இவ்வாறு மது அறுந்திவிட்டு நிராயுதபாணியான மக்கள் மீது தாக்குதல் நடத்தியது சரியா? ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந் நாட்டை ஆள முடியாது

ரணில் பிரதமர் ஆகியும் அவரால் பொருளாதாரதிற்கு தீர்வு வழங்க முடியவில்லை.

ஜனாதிபதியாக வந்தும் அவரால் எதுவுமே மேற்கொள்ள முடியாமல் உள்ளது

எனவே இராணுவ தளபதி இத்தாக்குதலிற்கு முழு பொறுப்பும் கூற வேண்டும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *