கிளிநொச்சி தெற்கு வலயத்திற்குட்பட்ட கரைச்சிக் கோட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் அட்டைகள் வழங்கும் பணிகள் நடைபெறவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் திங்கள் கிழமை பாடசாலைகள் மீண்டும்ஆரம்பமாகவுள்ள நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளமுடியாமல் குறித்த வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலைக்கு கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கரைச்சிக் கோட்ட கோட்டக் கல்விப்பணிப்பாளருமே ஆவார்.
இவர்களுடைய இந்த பொறுப்பற்ற நடவடிக்கைக்கு வடமாகாண கல்வி அமைச்சை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துவதோடு இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றது.
பிறசெய்திகள்