படையினரால் கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களும் பிணையில் விடுதலை!

காலி முகத்திடலில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கும் கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை சட்டத்தரணி நுவான் போபகே உள்ளிட்ட 9 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 9 பேரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *